84. அருள்மிகு உய்யவந்த பெருமாள் கோயில்
மூலவர் உய்யவந்த பெருமாள்
தாயார் வித்துவக்கோட்டுவல்லி, பத்மபாணி நாச்சியார்
திருக்கோலம் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் சக்ர தீர்த்தம்
விமானம் தத்வகாஞ்சன விமானம்
மங்களாசாசனம் குலசேகராழ்வார்
இருப்பிடம் திருவித்துவக்கோடு, கேரளா
வழிகாட்டி சென்னையில் இருந்து கோழிக்கோடு செல்லும் இரயில் பாதையில் உள்ள பட்டாம்பி இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சொரனூரிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் குருவாயூர் செல்லும் வழியில் உள்ளது.
தலச்சிறப்பு

Tiruvithuvakote Gopuram TiruvithuvakoteMoolavarஅம்பரீஷ மன்னன் மகாவிஷ்ணுவின் பரமபதக் காட்சியை காண வேண்டி தவம் புரிந்தான். பகவான், பிரத்யும்னன், அநிருத்தன், பரவாசுதேவன், சங்கர்ஷணன் என்னும் நான்கு வடிவங்களில் மன்னனுக்குக் காட்சி தந்த தலம். கோயிலில் நுழைந்ததும் சிவன் சந்நிதி உள்ளது. அவருக்குப் பின்னே பெருமாள் சந்நிதி உள்ளது.

மூலவர் உய்யவந்த பெருமாள் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் வித்துவக்கோட்டுவல்லி, பத்மபாணி நாச்சியார் ஆகிய திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றார். அம்பரீஷ மன்னனுக்கு பெருமாள் பிரத்யக்ஷம்.

பஞ்ச பாண்டவர்கள் தங்களது வனவாசக் காலத்தில் இங்கு வந்து பெருமாளை ஸேவித்தனர். கோயிலில் இருக்கும் மூர்த்திகளில் நடுவில் இருக்கும் மூர்த்தியை தர்மரும், மேற்கில் இருக்கும் மூர்த்தியை அர்ஜூனனும், இடப்புறம் இருக்கும் மூர்த்தியை பீமசேனனும், வலப்புறம் இருக்கும் மூர்த்தியை நகுல, சகாதேவனும் பூஜை செய்தனர்.

குலசேகராழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com